states

img

ஆந்திராவில் மழை வெள்ள பலி 8 ஆக உயர்வு தெலுங்கானாவுக்கும் ரெட் அலர்ட்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திராவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தெலுங்கா னாவின் 33 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்ச ரிக்கை விடுத்துள்ளது. அதே போல  ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவிற்கு விடுத்தது போன்று தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திற்கும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஹைதராபாத் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,  விஜயவாடா நகரம் மற்றும் ஹைதராபாத் மாவட்டத்தில் மாநில, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் உருக்குலைந்த ஆந்திரா வின் மச்சிலிப்பட்டினம், குடிவாடா, கை களூரு, நரசாபுரம், அமராவதி, மங்கள கிரி, நந்திகாமம், பீமாவரம் உள்ளிட்ட இடங்களில் மாநில பேரிடர் மீட்புப்படை யினர், தீவிர மீட்புப்பணி மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரயில்  சேவைகளும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கி மற்றும் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின்  எண்ணி க்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச மாக விஜயவாடாவில் வீடு இடிந்து 5 பேர் உயிரிழந்த நிலையில், குண்டூர் மாவட்டத் தில் ஓடையைக் கடக்கும்போது, ​​கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில், வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.